தமிழகத்தை அதிரவைத்த சம்பவம் | வேதனையில் எடப்பாடி பழனிச்சாமி!

காஞ்சிபுரம் : குருவிமலை பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று, தமிழக அரசுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவரின் செய்திக்குறிப்பில், “காஞ்சிபுரத்தை அடுத்த வளதோட்டம் பகுதியில் செயல்பட்ட தனியாருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை குடோனில்,இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 9 தொழிலாளர்கள் பலியானார்கள் என்ற செய்தி அறிந்து மிகவும் துயறுற்றேன்.

இறந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். வெடி விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், மரணமடைந்தவர்கள் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அரசை வலியுறுத்துகிறேன்” என்று எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையே, காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும்,  உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.