தலைநகரில் மீண்டும் நிலநடுக்கம்… மக்கள் பீதி!!

நேற்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் டெல்லியில் மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறிய நிலையில், இன்று மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நேற்று இரவு ஆப்கானிஸ்தான் பைசாபாத் பகுதியில் இருந்து 133 கி.மீ தொலைவில் உள்ள பகுதியில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு கீழே சுமார் 156 கிலோமீட்டர் தொலைவுக்கு உருவான நிலநடுக்கம் அது.

நிலநடுக்ம் இந்தியா, பாகிஸ்தான் மட்டுமல்லாது சீனா, துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் போன்ற நாடுகளிலும் உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

பாகிஸ்தானில் நிலநடுக்கத்தால் 11 பேர் உயிரிழந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் 3 பேர் பலினார்கள். இந்தியாவைப் பொறுத்தவரையில், டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம், பஞ்சாப் மற்றும் காஷ்மீர் போன்ற வடமாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டது.

இரவு பீதி அடைந்து வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். தொடர்ந்து மக்கள் அச்சத்தில் இருந்தனர். இந்நிலையில், டெல்லியில் தற்போது மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மிக குறைந்த அளவுதான் என்றாலும், தலைநகரில் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.