தேவாலயத்துக்கு வரும் பெண்களுக்கு பாலியல் தொல்லை- மத போதகர் அரெஸ்ட்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே, தேவாலயத்துக்கு வரும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மத போதகர் கைது செய்யப்பட்டார்.

சிவகாமிபுரத்தில் உள்ள தேவாலயத்தில் மத போதகராக பணியாற்றுபவர் ஸ்டான்லி குமார். இவர், வயிற்று வலிக்காக ஜெபம் செய்யக்கூறி தேவாலயத்திற்கு வந்த பெண்ணை தங்க வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

பெண்ணின் உறவினர்கள் தட்டிக் கேட்ட போது, பெண்ணிடம் மன்னிப்பு கோரிய ஸ்டான்லி, புகாரளித்தால் தான் தற்கொலை செய்துக் கொள்வேன் என்றும் மிரட்டியதாக சொல்லப்படுகிறது. இதே போல, மற்றொரு பெண் குளிப்பதை புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டு ஸ்டான்லி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்ததை அடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் போலீசில் புகாரளித்தார். அதன் பேரில், பெண்ணை மான பங்கப்படுத்துதல் பிரிவில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மத போதகர் ஸ்டான்லியை கைது செய்தனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.