பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்தவர்களிடம் நேரில் நலம் விசாரித்தார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்

காஞ்சிபுரம்: பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்தவர்களிடம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் சென்று நலம் விசாரித்தார். காஞ்சிபுரம் அருகே குருவி மலையில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று காலை திடிரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடிவிபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

முன்னதாக இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்திருந்த நிலையில் தற்பொழுது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் 15-திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களை போலீசார் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தற்பொழுது மருத்துவமனையில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.