”வாரிஸ் பஞ்சாப் தே” இயக்கத் தலைவர் அம்ரித் பால் சிங்கை கைது செய்ய தீவிரம்..!

காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித் பால் சிங்கை கைது செய்ய போலீசார் தீவிரமாக முயற்சித்து வரும் நிலையில், பல்வேறு தோற்றங்களுடன் அம்ரித் பால் இருப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

‘வாரிஸ் பஞ்சாப் தே’ இயக்கத் தலைவர் அம்ரித்பால் சிங் போலீஸ் பிடியில் இருந்து தப்பியோடிய நிலையில், அவரது ஆதரவாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

அம்ரித் பால் சிங் தனது தோற்றத்தை மாற்றி இருக்கலாம் என சந்தேகிக்கும் பஞ்சாப் போலீசார், பல்வேறு தோற்றத்துடன் அவர் காணப்படும் 7 புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

இதற்கிடையே, அம்ரித்பால் சிங் தப்பிச்செல்ல பயன்படுத்திய கார் கைப்பற்றப்பட்டதாகவும், குருத்வாராவிற்குள் சென்று உடை மாற்றிக் கொண்டு அவர் தப்பிச் சென்றதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.