Aishwarya Rajinikanth: இது டூ மச், என்னம்மா ஐஸ்வர்யா இப்படி பண்ணியிருக்கீங்களேமா: ரஜினி, தனுஷ் ரசிகர்கள்

Aishwarya Rajinikanth, dhanush: ஐஸ்வர்யாவுக்கு ரஜினி மற்றும் தனுஷ் ரசிகர்கள் அறிவுரை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

​ஐஸ்வர்யா ரஜினிகாந்த்​ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் வீட்டு லாக்கரில் இருந்து 60 பவுன் தங்க நகைகள் திருடுபோனது. இது குறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தன் வீட்டில் வேலை செய்து வரும் கார் டிரைவர் மற்றும் பணிப்பெண்கள் இரண்டு பேர் மீது சந்தேமாக இருப்பதாக தெரிவித்தார் ஐஸ்வர்யா. இதையடுத்து விசாரணையை துவங்கிய போலீசார் 40 வயதாகும் ஈஸ்வரி என்கிற பணிப்பெண்ணை கைது செய்துள்ளனர்.

​Aishwarya Rajinikanth:ஐஸ்வர்யா வீட்டில் நகை திருடிய பணிப்பெண் சிக்கினார்: 4 வருஷமா 20 பவுன் திருட்டு

​திருட்டு​ஐஸ்வர்யா வீட்டில் இருந்து கடந்த 4 ஆண்டுளாக கொஞ்சம் கொஞ்சமாக நகைகளை திருடியிருக்கிறார் ஈஸ்வரி. அவரிடம் இருந்து 20 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளது. ஈஸ்வரியின் வங்கி பரிவர்த்தனையை பார்த்து தான் அவரை பிடித்திருக்கிறார்கள் போலீசார். ஐஸ்வர்யா வீட்டில் இருந்து திருடிய நகைகளை விற்று சென்னையில் ரூ. 1 கோடிக்கு வீடு வாங்கியிருக்கிறார் ஈஸ்வரி.
​நம்பிக்கை​
பல ஆண்டுகளாக நம் வீட்டில் வேலை செய்து வருபவர்கள் தானே என ஐஸ்வர்யா அவர்களை நம்பி தன் லாக்கர் சாவி இருக்கும் இடத்தை எல்லாம் கூறியிருக்கிறார். வேலை விஷயமாக வெளியே செல்லும்போதும் நம் வீட்டு வேலைக்கார ஆட்கள் வீட்டையும், குழந்தைகளையும் பத்திரமாக பார்த்துக் கொள்வார்கள் என நம்பியிருக்கிறார். ஆனால் அவருக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார்கள்.
​லாக்கர்​கடந்த 2019ம் ஆண்டு சவுந்தர்யாவுக்கும், விசாகணுக்கும் திருமணம் நடந்தபோது அணிந்த நகைகளை எல்லாம் லாக்கரில் வைத்திருக்கிறார் ஐஸ்வர்யா. அன்று வைத்ததோடு சரி. கடந்த 4 ஆண்டுகளாக லாக்கரை திறந்து பார்க்கவே இல்லை. இதற்கிடையே மூன்று வீடுகள் வேறு மாறிவிட்டார். தற்போது லாக்கரை திறந்து பார்த்தபோது தான் நகைகள் மாயமானது தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

​ரசிகர்கள்​
ஐஸ்வர்யா வீட்டில் நடந்த விஷயம் அறிந்த ரஜினி மற்றும் தனுஷ் ரசிகர்கள் கூறியிருப்பதாவது, என்னம்மா இப்படி இருக்கீங்களேமா. கஷ்டப்பட்டு சம்பாதித்து வாங்கிய நகைகள் இருக்கும் லாக்கரை 4 வருஷமா திறந்து பார்க்காமலா இருப்பது. இது டூ மச். வீட்டில் வேலை செய்பவர்கள் மீது நம்பிக்கை வைப்பது தவறு இல்லை. இருப்பினும் இந்த அளவுக்கு இருக்கக் கூடாது. இனிமேலாவது லாக்கரை அடிக்கடி திறந்து நகைகள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பாருங்கள் என அறிவுரை வழங்கியுள்ளனர்.

​Dhanush: அதிரடி முடிவு எடுத்த தனுஷ்: அதுக்கு ஐஸ்வர்யா ஒத்துக்குவாரா?

​கூல்​பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் திருடு போயிருக்கிறது. அப்படி இருந்தும் லால் சலாம் ஷூட்டிங், ஒர்க்அவுட் என உங்களால் எப்படி கூலாக இருக்க முடிகிறது ஐஸ்வர்யா. என்ன பிரச்சனையாக இருந்தாலும் கூலாக இருப்பது எப்படி என்று உங்களிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.