கோவை : நீதிமன்ற வளாகத்தில் மனைவி மீது ஆசிட் வீசிய கணவன்.!

நீதிமன்ற வளாகத்தில் கணவர் மனைவி மீது ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பெண் ஒருவர் மீது ஆசிட் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் முதற்கட்ட விசாரணையில் கவிதா என்ற பெண்மீது அவரது கணவரே ஆசிட் வீசியுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த நபர் ஆசிட் வீசும் போது வழக்கறிஞர் ஒருவர் தடுக்க முயன்றுள்ளார். அப்போது வழக்கறிஞர் மீதும் ஆசிட் பட்டதில் அவரும் காயமடைந்துள்ளார். இதனையடுத்து அருகில் இருந்த வழக்கறிஞர்கள் ஆசிட் வீசிய நபரை மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும், ஆசிட் வீசியதில் படுகாயம் அடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஆசிட் வீசிய நபரிடம் தீவிர விசாரணை நடத்திய வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.