மதுரை : 17 வயது மகளை கர்ப்பமாக்கிய தந்தை.. 'போக்சோ'வில் கைது..!

மதுரை மாவட்டத்தில் 17 வயது மகளை கர்ப்பமாக்கிய தந்தையை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரது தந்தை அப்பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில், ஒரு மகன் மற்றும் ஒரு மகளுடன் வசித்து வந்த காவலாளி, தனது 17 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து சிறுமி கர்ப்பமானார்.

இந்நிலையில், இதையறிந்து அப்பகுதியை சேர்ந்த மகளிர் மன்ற நிர்வாகிகள், இது குறித்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் புகார் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த வாடிப்பட்டி போலீசார், விசாரணை மேற்கொண்டு போக்சோ சட்டத்தின் கீழ் சிறுமியின் தந்தையை கைது செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.