மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.6,500 ஆக உயர்வு

புதுச்சேரியில் ஏற்கெனவே மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.5,500 ஆக இருந்தது. இந்நிலையில், இந்த நிவாரணத்தை ரூ.1,000 உயர்த்தி ரூ.6,500 ஆக வழங்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார். இதற்காக அமைச்சரவையில் அனுமதி பெற்று அந்த கோப்பு துணை நிலை ஆளுநர் மாளிகைக்கு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது.

இந்நிலையில், மீன்பிடி தடைக்கால நிவாரணம் 6,500 ரூபாயாக உயர்த்தி அரசாணை வெளியிட ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.

இது தொடர்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: புதுச்சேரி, மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மீனவர்களுக்கான விடுமுறை கால நிதிஉதவி மற்றும் இயற்கை பேரிடர் கால நிவாரண உதவித் திட்டத்தின்கீழ் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கு மீன்பிடிக் கடைக்கால நிவாரணம் மற்றும் விடுமுறைக் கால நிதிஉதவியை உயர்த்தி வழங்குவதற்கான கோப்பிற்கு மாண்புமிகு துணைநிலை ஆளுநர் டாக்டர்; தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.

அதன்படி, மீன்பிடித் தடைக்கால நிவாரணம் – ரூ.5,500 இல் இருந்து ரூ. 6500 ஆகவும், விடுமுறைக்கான நிதியுதவி ரூ.2500 இல் இருந்து ரூ 3,000 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.