ராகுல்காந்திக்கு சிறைத்தண்டனை- மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் ஆலோசனை

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கு சூரத் நீதிமன்றம் பிரதமர் மோடி மீதான அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியதையடுத்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டது.

அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் 50க்கும் மேற்பட்ட எம்பிக்கள். மூத்த தலைவர்கள் இதில் கலந்துக் கொண்டனர். இன்று டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

டெல்லி விஜய் சதுக்கம் பகுதியில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூவிடம் நேரில் புகார் அளிக்க நேரம் ஒதுக்கும்படி காங்கிரஸ் கட்சி சார்பில்  கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.