Ajith: பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த அப்பா தூக்கத்தில் இறந்தார்: அஜித், சகோதரர்கள் அறிக்கை

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
Ajith Kumar father dies: அப்பாவின் மறைவு குறித்து அஜித் குமார் மற்றும் சகோதரர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

​அஜித்​அஜித் குமாரின் தந்தை பி. சுப்ரமணியம் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 85. சுப்ரமணியத்தின் மறைவு குறித்து அறிந்த பிரபலங்களும், ரசிகர்களும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் அஜித் குடும்பத்தார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது, எங்களது தந்தையார் திரு. பி.எஸ். மணி(85 வயது) அவர்கள் பல நாட்களாக உடல்நலமின்றி படுக்கையில் இருந்து வந்தார். இன்று அதிகாலை தன்னுடைய தூக்கத்தில் உயிர் நீத்தார்.
அறிக்கை
​மருத்துவர்கள்​கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தந்தையை அன்போடும், அக்கறையோடும் கவனித்து வந்தும், எங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவர்களுக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். எங்கள் தந்தையார் சுமார் அறுபது ஆண்டு காலமாக எங்கள் தாயின் அன்போடும், அற்பணிப்போடும் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.

​Ajith: அஜித் அப்பா சுப்பிரமணியம் மரணம்: பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல்

​செல்போன்​இந்த துயர நேரத்தில் பலர் எங்கள் தந்தையாரின் இறப்பு செய்தியை பற்றி விசாரிக்கவும், எங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காகவும் எங்களை தொலைபேசியிலோ, கைபேசியிலோ அழைப்பு விடுத்தோ அல்லது குறுந்தகவல் அனுப்பியோ விசாரித்து வருகின்றனர். தற்போதுள்ள சூழலில் எங்களால் உங்கள் அழைப்பை மேற்கொள்வதற்கோ அல்லது பதில் தகவல் அனுப்ப இயலாதமையை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறோம்.

​இறுதிச்சடங்கு​
எங்கள் தந்தையாரின் இறுதி சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம். எனவே இந்த இறப்பு தகவலை அறிந்த அனைவரும் எங்களுடைய துயரத்தையும், இழப்பையும் புரிந்துகொண்டு குடும்பத்தினர் துக்கத்தை அனுசரிக்கவும், இறுதி சடங்குகளை தனிப்பட்ட முறையில் செய்யவும் ஒத்துழைக்கும்படி வேண்டிக்கொள்கிறோம். அனுப் குமார், அஜித் குமார், அனில் குமார். [email protected] என்ற இமெயில் முகவரிக்கு இரங்கல் மெசேஜ் அனுப்பலாம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

​ஸ்டாலின்​சுப்ரமணியத்தின் மறைவு குறித்து அறிந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தன் இரங்கலை தெரிவித்துள்ளார். இரங்கல் செய்தியில் முதல்வர் கூறியிருப்பதாவது, நடிகர் திரு. அஜித்குமார் அவர்களின் தந்தை திரு. சுப்பிரமணியம் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி கேட்டு வருந்தினேன்.
தந்தையின் பிரிவால் வாடும் திரு. அஜித்குமார் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
முதல்வர்
​உதயநிதி ஸ்டாலின்​எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் தன் இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது, நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைந்தார் என்ற செய்தியை கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன் என்றார். இதற்கிடையே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஜித் அப்பாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். திரையுலக பிரபலங்கள் பலரும் அஜித் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.