இன்ஸ்டாவில் அழுதுகொண்டே வீடியோ; போஜ்புரி பட நடிகை அகான்ஷா ஹோட்டல் அறையில் தூக்குப் போட்டு தற்கொலை!

போஜ்புரி படங்களில் நடித்து வந்தவர் அகான்ஷா துபே. இவர் ஏராளமான மியூசிக் ஆல்பங்களை வெளியிட்டிருப்பதோடு, மாடலாக இருந்து வந்தார். படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக அகான்ஷா துபே வாரணாசியிலுள்ள சோமந்திரா என்ற ஹோட்டலில் இதர படப்பிடிப்பு குழுவினரோடு தங்கியிருந்தார். இன்று காலையில் நீண்ட நேரமாகியும் அகான்ஷா தங்கியிருந்த ஹோட்டல் அறை திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியர்கள், ஹோட்டலில் தங்கியிருந்த மற்ற படப்பிடிப்பு குழுவினருக்கு இது குறித்து தகவல் கொடுத்தனர். உடனே ஹோட்டல் ஊழியர்களும், படப்பிடிப்புக் குழுவினரும் சேர்ந்து அறை கதவைத் திறந்து பார்த்தபோது, உள்ளே அகான்ஷா தூக்கில் சடலமாகத் தொங்கிக் கொண்டிருந்தார். இது குறித்து உடனே போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

அகான்ஷா துபே

போலீஸார் விரைந்து வந்து அகான்ஷா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் படப்பிடிப்புக் குழிவினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகையின் குடும்பத்துக்கு இது குறித்து தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏராளமான போஜ்புரி வெற்றிப்படங்களில் நடித்திருக்கும் அகான்ஷா, போஜ்புரியில் திரைப்படத்துறையில் கனவுக்கன்னியாக விளங்கி வந்தார். தற்போது நாயக் என்ற படத்தில் நடிப்பதற்காக ஹோட்டலில் தங்கியிருந்தபோதுதான் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். இவர் 60 மியூசிக் ஆல்பங்களை வெளியிட்டிருக்கிறார்.

அகான்ஷா தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு தனது இன்ஸ்டாகிராமில் சிறிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், முகத்தை மூடிக்கொண்டு அழுதுகொண்டிருந்தார். இதனால் தற்கொலைக்கு முன்பு ஏதோ நடந்திருப்பது தெரியவந்திருக்கிறது. அது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்துகொண்ட நடிகைக்கு வயது 25. இளம் வயதில் தற்கொலை செய்துகொண்டிருப்பது போஜ்புரி படத்துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

அகான்ஷா துபே

அகான்ஷா தன்னுடன் நடிக்கும் சமீர் சிங் என்பவரைக் காதலித்து வந்தார். கடந்த காதலர் தினத்தன்றுதான் அதை அதிகாரபூர்வமாக அறிவித்தார். இந்தத் தற்கொலையில் அவரின் காதலருக்குத் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.