குடும்ப தகராறு… தீ வைத்துக்கொண்ட இளம்பெண்… திருவள்ளூரில் பரிதாபம்…!

திருவள்ளூர் மாவட்டத்தில் குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவருடைய மனைவியை அமுதா(29). இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட குடும்ப தகராறில் மனவேதனை அடைந்த அமுதா உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். இதையடுத்து குடும்பத்தினர் உடனடியாக அமுதாவை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அமுதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.