திருவள்ளூர் : நடுரோட்டில் நிலை தடுமாறிய இருசக்கர வாகனம் – முதியவர் பலி.!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு தாலுகா, சானாகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராமமூர்த்தி-பிரபாவதி தம்பதியினர். இவர்கள் மகன் சுந்தரம். இதில், ராமமூர்த்தி நேற்று இருசக்கர வாகனத்தில் மாமியார் வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பி வந்துள்ளார். 

அப்போது, அவர் வரும் வழியில் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் அளித்தனர். 

அந்த தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராமமூர்த்தியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் போலீசார் சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை செய்தனர்.

இதற்கிடையே மருத்துவமனைக்கு சென்ற ராமமூர்த்தியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.