மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 40 வயது கூலித்தொழிலாளிக்கு வலைவீச்சு…!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 40 வயது கூலித்தொழிலாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே பொம்மதாத்தனூர் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சக்காரலப்பா(40). இவர் மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயதுடைய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து, சிறுமியின் உறவினர்கள் இதுகுறித்து தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். 

இதற்கிடையே, இதையறிந்த சக்காரலப்பா தலைமறைவானார். இந்நிலையில், இந்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார், தலைமறைவான சக்காரலப்பாவை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.