மனைவி பிரிந்து சென்றதால் பக்கத்து வீட்டுக்காரர்கள் கொலை!!

மனைவியும், குழந்தைகளும் பிரிந்து சென்றதால் ஆத்திரம் அடைந்த கணவன், பக்கத்துவீட்டுக்காரர் தான் இதற்கு காரணம் என்று அவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் சேத்தன் கலா என்ற நபர் மனைவி மற்றும் குழந்தைகளோடு வசித்து வந்துள்ளார். அவர்களது குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் மனைவி மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் மனைவி, தனது 24 வயது மகன், இரண்டு மகள்களை கூட்டிக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் சேத்தன் தனியாக இருந்து வந்துள்ளார்.

இரண்டு மாதங்களாக தனியே இருந்து வந்த சேத்தன் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த சூழலில் தனது மனைவி மற்றும் குழந்தைகள் பிரிந்ததற்கு பக்கத்துக்கு வீட்டுக்காரர்கள்தான் காரணம் என்று அவர் நினைத்துள்ளார்.

இதையடுத்து, வீட்டில் இருந்து பெரிய கத்தியை எடுத்து வந்த சேத்தன், 77 வயது முதியவர், 70 வயது மூதாட்டி, 18 வயது இளம்பெண், 53 வயது தாயார் ஆகியோரை குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார்.

அங்கிருந்த 10 வயது சிறுவனையும் கொலை செய்ய சென்றபோது, மற்றவர்கள் கத்தி கூச்சலிடவே அங்கிருந்து ஓடி விட்டார். தகவல் அறிந்து வந்த போலீஸார், சடலங்களை உடற்கூராய்வுக்கு அனுப்பினர்.

பின்னர் தப்பிச்சென்ற சேத்தனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் இந்த கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.