Leo: உங்க ஸ்டைல்ல ஒரு படம் பண்ணனும்..முன்னணி இயக்குனரிடம் தன் ஆசையை வெளிப்படுத்திய தளபதி..!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்

​அடுத்தகட்டம் விஜய் நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான வாரிசு திரைப்படம் மிகவும் கலவையான விமர்சனங்களையே சந்தித்தது. மேலும் இப்படத்துடன் வெளியான அஜித்தின் துணிவு திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களை சந்தித்தது. படம் வெளியான முதல் வாரத்தில் துணிவு படத்தின் கையே ஓங்கி இருந்தது. எனவே வாரிசு திரைப்படம் தோல்வியை நோக்கி செல்லும் என எதிர்பார்த்திருந்த நேரத்தில் ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக படத்தை காண திரையரங்கில் குவிந்தனர். இதன் காரணமாக படத்தின் வசூல் மெல்ல மெல்ல அதிகரித்து இறுதியில் வசூல் ரீதியாக பிரம்மாண்டமான வெற்றியை பெற்றது. இப்படத்தின் மூலம் விஜய்யின் மார்க்கெட் அடுத்தகட்டத்துக்கு சென்றது

​பரபரப்பு விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு லோகேஷ் மீண்டும் விஜய்யுடன் இணைந்த திரைப்படம் தான் லியோ. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிவுக்கு வந்தது. இதையடுத்து அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் அடுத்த மாதம் துவங்கவுள்ளது. இந்நிலையில் கோலிவுட் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்திருக்கும் லியோ திரைப்படம் பூஜைக்கு முன்னரே தயாரிப்பாளருக்கு பலகோடி லாபத்தை பெற்று தந்துள்ளது. மேலும் இப்படத்தின் மூலம் ஆயிரம் கோடி வசூலை எட்டி புது சாதனையை படைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது
​மிஸ் செய்த விஜய் விஜய் இதுவரை பல இயக்குனர்களின் படங்களில் நடித்திருந்தாலும் ஒரு சில இயக்குனர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்துள்ளார். சுந்தர் சி, கௌதம் மேனன், மணிரத்னம் போன்ற இயக்குனர்களின் இயக்கத்தில் நடிக்க விஜய்க்கு வாய்ப்பு வந்தாலும் அதனை சில பல காரணங்களால் வேண்டாம் என்றுள்ளார் விஜய். இதையறிந்த ரசிகர்கள் சிலர் இந்த இயக்குனர்களின் படங்களில் விஜய் நடித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்குமே, இப்படி மிஸ் பண்ணிட்டாரே என வருந்தி வருகின்றனர். குறிப்பாக பொன்னியின் செல்வன், உள்ளதை அள்ளித்தா, சிங்கம் போன்ற பல மெகாஹிட் படங்களை விஜய் மிஸ் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

​வேண்டுகோள் வைத்த விஜய் விஜய் நிராகரித்த பல படங்களில் முதல்வன் திரைப்படமும் ஒன்று. ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மாஸ் ஹிட்டடித்த முதல்வன் படத்தில் முதலில் விஜய்யை நடிக்க வைக்க தான் நினைத்தார் ஷங்கர். ஆனால் சில காரணங்களால் அப்படத்தில் விஜய் நடிக்கமுடியாமல் போனது. இருந்தாலும் அதன் பிறகு நண்பன் படத்தில் ஷங்கரின் இயக்கத்தில் விஜய் நடித்திருந்தார். இந்நிலையில் ஒரு விழாவில் பேசிய விஜய், என்னதான் நான் ஷங்கரின் இயக்கத்தில் நண்பன் படத்தில் நடித்திருந்தாலும் அது ஒரு ரீமேக் படம் தான். எனவே ஷங்கரின் ஸ்டைலில் மாஸ் கமர்ஷியல் படத்தில் நடிக்க வேண்டும் என்பது தான் என் ஆசை என விஜய் வெளிப்படையாகவே தன் ஆசையை கூறினார். தற்போது இணையத்தில் விஜய்யின் பழைய வீடியோக்களை பகிர்ந்து வரும் ரசிகர்கள் இந்த வீடீயோவையும் அதிகம் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.