தங்கைக்கு ரூ.8 கோடி வரதட்சணை கொடுத்த விவசாயி அண்ணன்!!

தங்கையின் மீதுள்ள அதீத பாசத்தால் ராஜஸ்தானில் இரண்டு விவசாய சகோதரர்கள் திருமணத்திற்கு வரதட்சணையாக ரூ.8.1 கோடி மதிப்பிலான சொத்தை கொடுத்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

திங் சாரா என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாய சகோதரர்கள் அர்ஜுன் மற்றும் பகீரத் மெஹாரியா ஆகியோர் தங்கைக்கு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தங்கை மீது அளவற்ற பாசம் உண்டு.

எனவே யாரும் செய்திடாத வகையில், தங்கைக்கு செய்ய வேண்டும் என்று எண்ணினர். அந்த வகையில், தங்களுடைய சகோதரியின் திருமணத்திற்காக இருவரு் சேர்ந்து ரூ.8.1 கோடி வரதட்சணையாக வழங்கினர்.

ரூ.2.31 கோடி ரொக்கம், 1 கிலோ தங்கம், 14 கிலோ வெள்ளி, நிலம் மற்றும் பல வாகனங்கள் இதில் அடங்கும். சகோதரர்கள் இருவர் 8 கோடி ரூபாய் வரதட்சணை கொடுத்தது இணையத்தில் வைரலாகி வருகிறது. அண்ணன் – தங்கை பாசம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பலரும் கருத்து கூறி வருகின்றனர்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.