புலி தாக்கி இருவர் பலி| Two killed in tiger attack

சூரஜ்பூர், சத்தீஸ்கர் வனப்பகுதியில் புலி தாக்கியதில், இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சத்தீஸ்கரில் சூரஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கைலாஷ் சிங், சமாய் லால், ராய் சிங் ஆகியோர் அருகே உள்ள வனப்பகுதிக்கு நேற்று சென்றனர்.

தங்களுக்கு தேவையான விறகுகளை சேகரித்து விட்டு திரும்பும்போது, வனப்பகுதியில் சுற்றித்திரிந்த புலி, இவர்களை தாக்கியது. இதில் மூவரும் படுகாயம் அடைந்தனர்.

அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தோர் மூவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், வழியிலேயே கைலாஷ் சிங், சமாய் லால் ஆகியோர் பலியாகினர்.

படுகாயமடைந்த ராய் சிங்கிற்கு, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.