Akansha Dubey:தற்கொலை செய்யும் முன்பு இன்ஸ்டா லைவில் கதறி அழுத நடிகை ஆகான்ஷா

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
Akansha Dubey death: தற்கொலை செய்து கொண்ட போஜ்புரி நடிகை ஆகான்ஷா அழும் வீடியோ வைரலாகியுள்ளது.

​தற்கொலை​போஜ்புரி படங்களில் நடித்து வந்தவர் ஆகான்ஷா துபே. Meri Jung Mera Faisla படம் மூலம் போஜ்புரி திரையுலகில் அறிமுகமானார். அவர் புதுப்படம் ஒன்றின் ஷூட்டிங்கிற்காக உத்தர பிரதேச மாநிலத்தில் இருக்கும் வாரணாசிக்கு சென்றார். படப்பிடிப்பின் முதல் நாள் அன்று ஹோட்டல் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் ஆகான்ஷா. 25 வயதே ஆன ஆகான்ஷா இப்படி ஒரு முடிவு எடுத்தது திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
​அழுகை​ஆகான்ஷா துபே தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் இறப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் லைவில் வந்தார் ஆகான்ஷா. அப்பொழுது அவர் தன் கையால் வாயை பொத்திக் கொண்டு கதறி அழுதார். ஆனால் எதற்காக அழுதார் என்று கூறவில்லை. அழுத சில மணிநேரங்களில் ஆகான்ஷா இறந்துவிட்டார். இந்நிலையில் அவர் அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
கண்ணீர்
​டான்ஸ்​இறப்பதற்கு முன்பு தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார் ஆகான்ஷா. போஜ்புரி பாடலுக்கு பெல்லி டான்ஸ் ஆடியிருந்தார். சந்தோஷமாக ஆடிய ஆகான்ஷாவா இறந்துவிட்டார் என பலரும் வியந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். 17 வயதில் நடிக்க வந்த ஆகான்ஷா 25 வயதில் இறந்துவிட்டார்.

பெல்லி டான்ஸ் View this post on Instagram A post shared by ���������������� ���������� (@akankshadubey_official)
​மன அழுத்தம்​கடந்த 2018ம் ஆண்டு மன அழுத்தத்தால் அவதிப்பட்டு வந்தாராம் ஆகான்ஷா. இதையடுத்து கெரியரில் இருந்து பிரேக் எடுத்திருக்கிறார். அந்த சமயத்தில் அம்மா தான் தனக்கு உதவி செய்ததாக ஆகான்ஷா தெரிவித்தார். தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்தவரை தன் சக நடிகரான சமர் சிங்கை காதலித்து வந்தார் ஆகான்ஷா. கடந்த பிப்ரவரி 14ம் தேதி சமர் சிங்கிற்காக காதல் பொங்க போஸ்ட் போட்டிருந்தார்.
​ஷூட்டிங்​ஆகான்ஷாவுக்கு நெருக்கமான ஒருவர் கூறியதாவது, நாயக் படத்தின் முதல் நாள் ஷூட்டிங். வாரணாசியில் படப்பிடிப்பு நடந்தது. காலை 9 மணிக்கு மேக்கப் பாய் ஆகான்ஷாவை அழைக்க ஹோட்டல் அறைக்கு சென்றபோது அவர் தூக்கில் பிணமாகத் தொங்கினார். அக்லேஷ் வர்மாவுடன் சேர்ந்து நாயக் படத்தில் நடித்து வந்தார் என்றார்.
​கெரியர்​போஜ்புரி பாடகரும், நடிகருமான யஷ் குமாருடன் சேர்ந்து மிட்டி படத்தில் நடித்து முடித்துள்ளார் ஆகான்ஷா. சந்தன் உபத்யாய இயக்கியிருக்கும் அந்த படத்தில் ரக்ஷா குப்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் பவன் சிங்குடன் சேர்ந்து அவர் வந்த இசை வீடியோவா Ye Aara Kabhi Hara Nahi ஆகான்ஷா இறந்த நாள் அன்று தான் ரிலீஸானது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.