Pradeep Ranganathan: பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிக்க யோசிக்கும் வாரிசு நடிகை..விளாசி தள்ளும் ரசிகர்கள்..!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
லவ் டுடே என்ற ஒரே படத்தின் மூலம் ஒட்டுமொத்த திரையுலகையும் தன் பக்கம் திருப்பினார் பிரதீப் ரங்கநாதன். இவர் என்னதான் இயக்குனராக கோமாளி என்ற படத்தின் மூலம் வெற்றி பெற்றாலும் ஹீரோவாக லவ் டுடே படத்தில் அறிமுகமானார்.

இப்படத்தை அவரே இயக்கியும் இருந்தார். பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பையன் போல இருக்கும் பிரதீப்பின் தோற்றம் இளம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. தன் எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார் பிரதீப். வெறும் ஐந்து கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் கிட்டத்தட்ட 80 கோடிக்கு மேல் வசூலித்தது.

Leo: படம் முடியும் வரை கொஞ்சம் பொறுமையா இருப்பா..லோகேஷிற்கு தளபதி போட்ட கண்டிஷன்..!

இதைத்தொடர்ந்து பிரதீப்பை வைத்து படமெடுக்க பல தயாரிப்பாளர்கள் வரிசை கட்டி நிற்கின்றனர். இந்நிலையில் அடுத்ததாக ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக கமலா தயாரிக்க விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார் பிரதீப் ரங்கநாதன். இப்படத்தில் நயன்தாராவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வருகின்றன.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

இதைப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதைத்தவிர கோகுல் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக இருந்த கொரோனா குமார் படத்தில் சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பதாகவும் ஒரு தகவல் வந்துள்ளது.

சம்பள பிரச்சனை காரணமாக சிம்பு கொரோனா குமார் படத்திலிருந்து விலக அவருக்கு பதிலாக பிரதீப் இப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் கொரோனா குமார் படத்தில் நாயகியாக நடிக்க கமிட்டான அதிதி ஷங்கர் பிரதீப்பிற்கு ஜோடியாக நடிக்க தயக்கம் காட்டுவதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகின்றது.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் கார்த்தியின் விருமன் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் மாவீரன் படத்தில் நடித்து வருகின்றார். இதையடுத்து சிம்பு நடிப்பதாக இருந்த கொரோனா குமார் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

இவ்வாறு முன்னணி நடிகர்களின் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் அதிதி ஷங்கர் இளம் நாயகனான பிரதீப் ரங்கநாதனுடன் ஜோடி சேருவதில் தயக்கம் காட்டி வருகிறாராம்.. முதலில் சிம்பு நாயகனாக நடிக்கின்றார் என்பதற்காக தான் கொரோனா குமார் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் அதிதி.

ஆனால் தற்போது ஹீரோ மாறியதால் கொரோனா குமார் படத்தில் நடிப்பதை பற்றி யோசித்து வருகிறாராம் அதிதி. இதைக்கேள்வி பட்ட ரசிகர்கள் பலரும் பிரதீப் ரங்கநாதனுடன் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவே நடிக்க சம்மதம் தெரிவித்த நிலையில் இவர் ஓவரா சீன் போடுறாங்களே என அதிதியை விளாசி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.