அதிமுக பொதுச் செயலாளர் பதவி – கடந்து வந்த பாதை: எடப்பாடி பழனிசாமிக்கு எத்தனையாவது இடம்?

தமிழ்நாட்டை அதிக ஆண்டுகள் ஆண்ட கட்சி அதிமுக. அக்கட்சியின் உச்ச பட்ச அதிகாரம் பொதுச் செயலாளருக்கே உரியது. அந்த பதவியைக் கைப்பற்ற தான் எத்தனையோ போட்டி, இழுபறி, மோதல், சட்டப் போராட்டம் நடந்த நிலையில் அத்தனை எதிர்ப்புகளையும் சமாளித்து

இன்று அந்த பொறுப்பில் அமர்ந்துள்ளார்.

பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை அறிவிக்கலாம் என்று உயர் நீதிமன்றம் அறிவித்த நிலையில் தேர்தல் அலுவலர்களான பொள்ளாச்சி ஜெயராமனும், நத்தம் விஸ்வநாதனும் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான வெற்றி சான்றிதழை வழங்கினர்.

இதன் மூலம் அதிமுகவின் ஆறாவது பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுள்ளார்.

முன்னதாக எம்ஜிஆர் 1972 முதல் 1978 வரையும் பின்னர் 1986 முதல் 1987 வரையும் சுமார் ஏழு ஆண்டுகள் பொதுச் செயலாளாராக பதவி வகித்தார்.
நாவலர் நெடுஞ்செழியன் 1978 முதல் 1980 வரையும் பின்னர் 1988 முதல் 1989 வரையும் சுமார் மூன்று ஆண்டுகள் பொதுச் செயலாளாராக பதவி வகித்தார்.
ப.உ.சண்முகம் 1980 முதல் 1985 வரை சுமார் நான்கரை ஆண்டுகள் பதவி வகித்தார்.
எஸ்.ராகவானந்தம் 1985 முதல் 1986 வரை சுமார் ஒன்றரை ஆண்டுகள் பொதுச் செயலாளராக பதவி வகித்தார்.
ஜெயலலிதா 1989 ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை சுமார் 28 ஆண்டுகள் பொதுச்செயலாளராக பதவி வகித்துள்ளார்.
அதற்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி தான் பொதுச் செயலாளர் பதவியில் இன்று (28 மார்ச் 2023 ) பொறுப்பேற்றுள்ளார். எனவே ஆறாவது நபராக இந்த பதவியில் அமர்ந்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர்

தற்காலிக பொதுச் செயலாளராக சில நாள்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஜூலை 11 பொதுக்குழுவுக்குப் பின்னர் எடப்பாடி பழனிசாமியும் இடைக்காலப் பொதுச் செயலாளராக பதவி வகித்ததும் கவனத்தில் கொள்ளத் தக்கது.

“அதிமுக பொதுச் செயலாளாராக என்னை தேர்ந்தெடுத்த அதிமுக தொண்டர்களுக்கும், நிர்வாகிகளும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.