ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடிய இருவருக்கு போலீஸ் காவல்

Tamil Crime News: ஈஸ்வரியிடமிருந்து களவு போயிருந்த 100 சவரன் தங்க நகைகளும், 30 கிராம் வைர நகைகளும் மீட்கப்பட்டுள்ளது. மேலும், 4 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் வீட்டுப் பத்திரம் ஆகியனவும் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் ஓட்டுநர் வெங்கடேசனிடம் ஈஸ்வரி ரூ. 9 லட்சம் கொடுத்துள்ளார். தனது கணவர் அங்கமுத்து பெயரில் 350 கிராம் தங்க நகைகளை வங்கி கணக்கில் அடகு வைத்துள்ளார். இதனை தற்போது மீட்கும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர். இதனிடையே எந்தெந்த நகைகள் திருடப்பட்டது என்று ஐஸ்வர்யாவால் தெளிவாக கூற முடியவில்லை என கூறப்படுகிறது. ஏனென்றால் இறுதியாக தங்கை சௌந்தர்யாவின் திருமணத்தின் போது தான் கடைசியாக அந்த நகைகளை அணிந்துள்ளாராம்.

அதோடு எந்த எந்த நகைகள் திருட்டப்பட்டுள்ளது என ஐஸ்வர்யாவுக்கு தெளிவாக தெரியாததால் தங்கை சவுந்தர்யாவின் திருமண ஆல்பத்தில் ஐஸ்வர்யா அணிந்து இருந்த நகைகளை காணாமல் போன நகைகளுடன் ஒப்பிட்டு போலீசார் மதிப்பிட்டு வருகின்றனர். இந்த நிலையில் காவல்துறையினர் ஐஸ்வர்யா பணிப்பெண் ஈஸ்வரி மற்றும் டிரைவர் ஆகிய இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் காவல்துறைக்கு அனுமதி அளித்துள்ளது. இந்த விசாரணையில் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.