மெக்சிகோவில் புலம்பெயர்ந்தவர்கள் இருந்த இடத்தில் தீ விபத்து – 39 பேர் உயிரிழப்பு

மெக்சிகோவில் புலம்பெயர்ந்தவர்கள் இருந்த இடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 39 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க எல்லைக்கு அருகேயுள்ள மெக்சிகோவின் சியுடாட் ஜுவாரெஸில் உள்ள புலம்பெயர்ந்தவர்கள் இருந்த இடத்தில் இந்த தீ ஏற்பட்டுள்ளது.

படுகாயமடைந்த 29 பேர் அருகில் உள்ள 4 மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வெனிசுலாவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.