Vijay: நானும் விஜய்யும் பரஸ்பரமாக பேசி பிரிந்தோம்..வெளிப்படையாக பேசிய பிரபல இயக்குனர்..!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
இன்று விஜய் தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் ஒரு நடிகர். படத்திற்கு படம் புது புது வசூல் சாதனையை நிகழ்த்தி வருகின்றார் விஜய். எனவே இவரின் படத்தை தயாரிக்கவும், இயக்கவும் பலர் தவம் இருக்கின்றனர். தன் திரைப்பயணத்தில் விஜய் பார்த்திடாத வெற்றியே இல்லை எனலாம்.

அந்த வெற்றிக்கெல்லாம் அஸ்திவாரம் போட்ட திரைப்படம் தான் பூவே உனக்காக.விக்ரமன் இயக்கத்தில் வெளியான பூவே உனக்காக திரைப்படம் விஜய்க்கு முதல் வெற்றிப்படமாக அமைந்து அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதற்கு முன்பு விஜய் பல படங்களில் ஹீரோவாக நடித்தாலும் அவருக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

Sivakarthikeyan: அப்போ ஹோஸ்ட்..இப்போ கெஸ்ட்..அடுத்தது என்ன ? சிவகார்த்திகேயன் சொன்ன செம அப்டேட்..!

அந்த சமயத்தில் தான் பூவே உனக்காக படத்தில் விஜய்யை நடிக்க வைத்தார் விக்ரமன். இப்படத்தில் விஜய்யை நடிக்கவைத்ததற்காக பலரும் விக்ரமனை எச்சரித்தனர். விஜய்யால் இக்கதாபாத்திரத்தில் சிறப்பாக நடிக்கமுடியுமா ? சற்று சொதப்பினாலும் நல்ல கதை தோல்வியடைந்துவிடும், வேறொரு ஹீரோவை வைத்து இப்படத்தை இயக்குங்கள் என பலர் விக்ரமனுக்கு அட்வைஸ் செய்தனர்.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

ஆனால் அதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாது விஜய் மீது முழு நம்பிக்கை வைத்து பூவே உனக்காக படத்தை துவங்கினார் விக்ரமன். விஜய்யும் விக்ரமனின் நம்பிக்கையை காப்பாற்றி தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தினார். இதன் பிறகு விஜய்யின் திரைவாழ்க்கையில் அவர் திரும்பிப்பார்க்கவே இல்லை.

பூவே உனக்காக

விஜய்க்கென ஒரு தனி ரசிகர் கூட்டம் பூவே உனக்காக படத்திற்கு பிறகு உருவானது. இந்நிலையில் ஒரு பேட்டியில் விக்ரமன் பேசுகையில், விஜய்க்கும் எனக்கும் உன்னை நினைத்து படத்தின்போது முரண்பாடு ஏற்பட்டது. அதன் பிறகு நாங்கள் பரஸ்பரமாக பேசி பிரிந்தோம், என கூறியுள்ளார்.

சூர்யா நடிப்பில் விக்ரமன் இயக்கிய உன்னை நினைத்து படத்தில் விஜய் தான் முதலில் நடித்தார். சில நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்ட விஜய் கதையில் சில மாற்றங்களை செய்யச்சொன்னார். ஆனால் விக்ரமன் கதையில் மாற்றங்கள் செய்ய விரும்பவில்லை.

எனவே விஜய்யும் விக்ரமனும் எந்த பிரச்னையும் இன்றி பரஸ்பரமாக பேசி பிரிந்தனர். இதனை விக்ரமன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். மேலும் தற்போதும் விஜய்யுடன் நல்ல நட்பில் இருந்து வருவதாகவும் கூறியுள்ளார் விக்ரமன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.