தற்போதைய அரசாங்கம் அடக்குமுறைகளை மேற்கொள்வதற்கு இடமளிக்காது என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
துஸ்டர்களினால் சின்னாபின்னமாக்கப்பட்ட நெடுங்கேணி ஆதிசிவன் ஆலயத்தினை விரைவில் மீண்டும் அமைப்பது தொடர்பாக, நேற்று இடம்பெற்ற அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் ஆதரவாக இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையம் பொது மக்களின் பாவனைக்காக நேற்று (28) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் ஜீவன் தொண்டமானும் இந்த விடயத்தினை தன்னோடு இணைந்து அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வந்ததாகவும் மேலும் தெரிவித்தார்.
வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் வட மாகாணத்தில் முதன்முறையாக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வடமாகாண சபைக்கே உரித்தான கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையமே இவ்வாறு திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.