இங்கிலாந்தில் கொள்ளையடிப்பதற்காக வீடொன்றில் நுழைந்த நபர்கள்: பெண்ணுக்கு நேர்ந்த துயரம்…


இங்கிலாந்தில், வீடொன்றில் கொள்ளையடிக்கச் சென்ற கொள்ளையர்கள் தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழக்க, கொள்ளை வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

கொள்ளை முயற்சியின்போது காயமடைந்த பெண்

திங்கட்கிழமை மாலை 5.45 மணியளவில், இங்கிலாந்திலுள்ள Somerset என்ற இடத்திலுள்ள Broomfieldஇல் வாழ்ந்துவந்த பெண்மணி ஒருவர் வீட்டுக்குள் கொள்ளையர்கள் நுழைந்துள்ளனர்.

கொள்ளை முயற்சி நடப்பதாக தகவலறிந்த பொலிசார் உடனடியாக அந்த வீட்டுக்கு விரைந்துள்ளார்கள். அப்போது, அந்த வீட்டில் 80 வயதுகளிலிருக்கும் ஒரு பெண்மணி படுகாயமடைந்து கிடப்பதை அவர்கள் கண்டுள்ளார்கள்.

இங்கிலாந்தில் கொள்ளையடிப்பதற்காக வீடொன்றில் நுழைந்த நபர்கள்: பெண்ணுக்கு நேர்ந்த துயரம்... | Robbering In A England Home

Image: SWNS

பொலிசாரும் மருத்துவ உதவிக்குழுவினரும் அவரைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகள் பலிக்காமல் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துவிட்டார்.

இந்த துயர சம்பவம் தொடர்பாக இரவு 8.40 மணியளவில் Broomfield என்ற இடத்தில் 30 வயதுகளிலிருக்கும் நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.
அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 

இங்கிலாந்தில் கொள்ளையடிப்பதற்காக வீடொன்றில் நுழைந்த நபர்கள்: பெண்ணுக்கு நேர்ந்த துயரம்... | Robbering In A England Home

Image: SWNS

இது முதல் முறையல்ல

  இதேபோல, சில நாட்களுக்கு முன், Suffolk என்ற இடத்திலும் முகமூடிக் கொள்ளையர்கள் வீடு ஒன்றைக் கொள்ளையடிக்க முயன்றபோது Joy Middleditch என்னும் பெண்மணி தாக்கப்பட்டார். அவர் உயிரிழந்ததையடுத்து, அந்த வழக்கும் கொலை வழக்காக விசாரிக்கப்பட்டு வருகிறது. 

இங்கிலாந்தில் கொள்ளையடிப்பதற்காக வீடொன்றில் நுழைந்த நபர்கள்: பெண்ணுக்கு நேர்ந்த துயரம்... | Robbering In A England Home

Image: SWNS



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.