சீக்கியர்கள் ஒன்று திரள வேண்டும்: வீடியோ வெளியிட்டு அம்ரித்பால் சிங் பரபரப்பு| Sikhs must unite: Amritpal Singh stirs controversy by releasing video

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: பஞ்சாப் விவகாரத்தில் சீக்கியர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால்சிங், வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

காலிஸ்தான் அமைப்பின் ஆதரவாளரும், தீவிரவாத போதகருமான அம்ரித்பால் சிங், கடந்த மாதம் அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனை சூறையாடினார். இதையடுத்து, அம்ரித்பால் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்ய தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

latest tamil news

அமிர்தசரஸ், ஹரியானா, புதுடில்லி உட்பட பல்வேறு இடங்களில், தன் அடையாளங்களை மாற்றியபடி சுற்றித் திரிந்த அம்ரித்பால் சிங்கை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்நிலையில் அம்ரித்பால் சிங் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசி இருப்பதாவது, நம் சீக்கிய சமூகம் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது. போலீசிடமிருந்து என்னை காப்பாற்றியது கடவுள் தான். ஒட்டு மொத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் இனி ஒன்று சேர வேண்டிய நேரம் இது. பஞ்சாப் விவகாரத்தில் சீக்கியர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும். இவ்வாறு அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.