புனே தொகுதி பாஜக எம்.பி. கிரீஷ் பபத் மறைவு: எளிமையான மற்றும் கடினமான உழைப்பாளி என பிரதமர் மோடி உருக்கம்

புதுடெல்லி,

மராட்டியத்தின் புனே நகர தொகுதியை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. கிரீஷ் பபத். உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர், தீனானாத் மங்கேஷ்கர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இதன்பின் உடல்நிலை மோசமடைந்த நிலையில், தீவிர சிகிச்சை பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டார். தொடர்ந்து, உயிர் காக்கும் சிகிச்சையும் அவருக்கு அளிக்கப்பட்டது. எனினும், அவருக்கு அளித்து வந்த சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார்.

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் அவர் புனே நகர தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கையில்,

கிரிஷ் பபத் எளிமையான மற்றும் கடினமான உழைப்பாளி. சமூகத்திற்காக பணியாற்றியுள்ளார். மராட்டியத்தின் வளர்ச்சியில் கவனம் கொண்டிருந்த அவர், புனே நகரம் வளர்வது குறித்து கனவு கண்டவர்.

பாஜகவை கட்டமைப்பதிலும், வளர்ப்பதிலும் ஆக்கப்பூர்மாக பணியாற்றி உள்ளார். எம்.எல்.ஏ., ஆக இருந்த போது மக்கள் நலனுக்காக கேள்வி எழுப்பிய அவர், அமைச்சராகவும், எம்.பி., ஆகவும் சிறப்பாக பணியாற்றி உள்ளார். அவரது சிறப்பான பணியை மக்கள் எப்போதும் நினைவில் வைத்து இருப்பார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.