ஷார்ஜாவில் இந்தியர் ஒருவர் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
11-வது மாடியிலிருந்து குதித்து இந்தியர் தற்கொலை
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒரு பகுதியான ஷார்ஜாவில் இந்திய நாட்டவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு, பின்னர் தானும் 11-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
உள்ளூர் நேரப்படி, செவ்வாய்க்கிழமை மாலை ஒரு அழைப்பைப் பெற்ற பொலிசார் மற்றும் துணை மருத்துவர்களும் ஷார்ஜாவில் சம்பவ இடத்திற்கு வந்து அந்த நபரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
Representative Image: Alamy
சட்டைப்பையில் இருந்த குறிப்பு
அந்த நபருக்கு 30 வயதிற்கு மேல் இருக்கலாம் என கூறப்படுகிறது, அவர் கடுமையான காயங்களுக்கு ஆளானார். அவரது அடையாளத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களைத் தேடும் போது, அதிகாரிகள் அவரது சட்டைப்பையில் ஒரு குறிப்பை மீட்டனர், அதில் அந்த நபர் மாடியிலிருந்து குதிப்பதற்கு முன்பு தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள், நான்கு வயது மகன் மற்றும் எட்டு வயது மகள் ஆகியோரை அவர்களது வீட்டில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
மேலும் அந்த குறிப்பில், 11-வது மாடியில் உள்ள அவர்களின் குடியிருப்பிலிருந்து இறந்த உடல்களை மீட்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
அவர்கள் உடனடியாக குடும்பத்தினரின் வீட்டிற்குச் சென்று அந்த நபர் கடிதத்தில் எழுதிய தகவல் சரியானது என்பதை உறுதிப்படுத்தியதாக காவல்துறை கூறியது. இறந்தவர்களின் உடல்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் பிரேத பரிசோதனைக்காக தடயவியல் ஆய்வகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த சம்பவத்திற்கான காரணம் தெரியவில்லை என்றும், விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் ஷார்ஜா காவல்துறை தெரிவித்துள்ளது.
அக்கம்பக்கத்தினர் கூறுகையில், கடந்த 6 மாதங்களாக இந்த கட்டிடத்தில் குடும்பம் வசித்து வந்தது தெரியவந்தது.