பொன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து மருதநாயகத்தை தூசி தட்டும் கமல்

1997ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் உருவான படம் மருதநாயகம். இது அவரது கனவு படமும் கூட. ஆனால் 40 நிமிட காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் அந்த படம் நிறுத்தப்பட்டது. அப்படத்தின் பூஜை நிகழ்ச்சியின் போது இங்கிலாந்து ராணி எலிசபெத் கலந்து கொண்டார் . அதோடு அப்போதைய தமிழக முதலமைச்சர் கருணாநிதி மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உள்ளிட்ட பலரும் அந்த பூஜையில் பங்கேற்றார்கள்.

இந்த நிலையில் 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மருதநாயகம் படத்தை தூசி தட்டப் போகும் கமல்ஹாசன், அதில் தனக்கு பதிலாக விக்ரமை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார். என்றாலும் கமல் ஏற்கனவே நடித்த 30 நிமிட காட்சிகளும் அப்படத்தில் இடம்பெறுப் போகிறது. அதற்கு தகுந்தார் போன்று திரைக்கதையை அமைக்க திட்டமிட்டுள்ளாராம் கமல்ஹாசன்.

சமீபகாலமாக பாகுபலி, பொன்னியின் செல்வன் போன்ற சரித்திர படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருவதால் மருதநாயகத்தையும் வெளியிடும் ஆர்வம் கமல்ஹாசனுக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.