ஆர்.எஸ்.எஸ் வகுப்பு சென்ற மாணவர்கள் மீது தாக்குதல்… இந்து அமைப்புகள் திரண்டதால் பரபரப்பு..!

கோயம்புத்தூரில் ஆர்எஸ்எஸ் அமைப்பு நடத்தும் பயிற்சி வகுப்பில் பங்கேற்க சென்ற சிறுவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்நிலையம் முன்பு திரண்ட இந்து அமைப்பினரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

வெரைட்டிஹால் பகுதியில் நடைபெறும் வகுப்பில் பங்கேற்க சிறுவர்கள் வந்த நிலையில், அங்கு வந்த கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் ஞானசேகர் என்பவர் தகாத வார்த்தை பேசி அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், காவல்நிலையம் முன்பாக திரண்ட இந்து அமைப்பினரிடம் மாநகர துணை கமிஷனர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.

ஞானசேகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.