எனக்கு பதவி வேண்டாம் – தேவையெனில் ரணில் தருவார் – மஹிந்த பரபரப்பு தகவல்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியை ஏற்குமாறு கட்சி உறுப்பினர்கள் சிலர் அழுத்தம் பிரயோகித்து வருவதாக தெரியவந்துள்ளது.

எனினும் மஹிந்த ராஜபக்ஷ அதற்கு பெரிய அளவில் விரும்பவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. 

எனக்கு பதவி வேண்டாம் - தேவையெனில் ரணில் தருவார் - மஹிந்த பரபரப்பு தகவல் | Mahinda Rejects Prime Minister Post

தனக்கு ஒரு தேவை என்றால் அதனை நிறைவேற்றி வைப்பதற்கு ஜனாதிபதியும் அரசாங்கமும் தயாராக இருக்கும் நிலையில் பதவி ஏற்கும் தயார் நிலையில் அவர் இல்லை என தெரியவந்துள்ளது.

அத்துடன் அரசாங்கத்திற்கு அவசியமான நேரத்தில் ஆலோசனை வழங்குவதற்கும் மஹிந்த ராஜபக்ஷ தயாராகவே உள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்வாறான சூழலில் பிரதமர் பதவியை ஏற்பதில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு மிகப்பெரிய அளவில் ஆர்வம் இல்லை என பொது ஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.