ஒரே பாலின திருமணம் தலைமை நீதிபதிக்கு கடிதம்| Same-Sex Marriage Letter to Chief Justice

புதுடில்லி, ஒரே பாலின திருமணத்துக்கு அங்கீகாரம் அளிப்பது, தங்கள் மத நம்பிக்கைக்கு எதிரானதாக இருக்கும் என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, பல சிறுபான்மையின அமைப்புகள் கடிதம் எழுதியுள்ளன.

ஒரே பாலின திருமணத்துக்கு அங்கீகாரம் கேட்டு, உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், முஸ்லிம், கிறிஸ்துவர், ஜெயின் ஆகிய சிறுபான்மையினத்தைச் சேர்ந்த சில அமைப்புகள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, டி.ஒய்.சந்திரசூடுக்கு தனித் தனியாக கடிதம் எழுதி உள்ளன.

இதில், ‘ஒரே பாலின திருமணத்தை அங்கீகரித்தால், அது தங்களுடைய மத நம்பிக்கைக்கு எதிரானதாக இருக்கும்’ என, குறிப்பிடப்பட்டு உள்ளது. ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கும் இதுபோன்ற கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிப்பதை மத்திய அரசும் எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.