குவஹாத்தி, திரிபுராவில், சட்டசபை கூட்டத்தின் போது, ‘மொபைல் போனில்’ ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்த பா.ஜ., – எம்.எல்.ஏ.,வின், ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வடகிழக்கு மாநிலமான திரிபுராவில், முதல்வர் மாணிக் சாஹா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, மாநில சட்டசபையில், பட்ஜெட் மீதான விவாதம் நேற்று நடந்தது.
காரசாரமான விவாதம் நடந்து கொண்டிருந்த வேளையில், திரிபுராவின் பாக்பாஸா தொகுதியைச் சேர்ந்த பா.ஜ., – எம்.எல்.ஏ., ஜாதவ் லால் நாத் தன், ‘மொபைல் போனில்’ மிக ஆர்வமாக எதையோ ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்.
தர்மசங்கடம்
இதை அவருக்கு பின்னால் அமர்ந்திருந்த ஒரு உறுப்பினர் தன், ‘மொபைல் போனில்’ படம் பிடித்து, அதை சமூகவலைதளத்தில் வெளியிட்டார்.
அப்போது தான், பா.ஜ., – எம்.எல்.ஏ., ஜாதவ் லால் நாத், மொபைல் போனில் ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்த விபரம் தெரியவந்தது.
இது, சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவியதை அடுத்து, கட்சிக்கு மிகப் பெரிய தர்மசங்கடத்தை ஏற் படுத்தியது.
உத்தரவு
இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, எம்.எல்.ஏ., ஜாதவ் லால் நாத்துக்கு உத்தர விடப்பட்டு உள்ளது. ஆனால், இதுவரை அவர் வாய் திறக்கவில்லை.
கர்நாடகாவில், 2012ல் பா.ஜ., ஆட்சியில் இருந்தபோது, அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் லக்ஷ்மண் சாவடி மற்றும் சி.சி.பாட்டீல் ஆகியோர் சட்டசபை கூட்டத்தின் போது ஆபாச படம் பார்த்து சிக்கி பதவியை இழந்தனர்.