Samantha: விவாகரத்தில் முடிந்த காதல் திருமணம்: படுமோசமான நிலையில் இருந்தேன்- சமந்தா

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
Samantha Interview: காதல் கணவரான நாக சைதன்யாவை பிரிந்து வாழ்வது குறித்து பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியிருக்கிறார் சமந்தா.

​விவாகரத்து​ஏ மாய சேசாவே படத்தில் சேர்ந்து நடித்தபோது சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் கோவாவில் வைத்து திருமணம் செய்து கொண்டார்கள். நான்காவது திருமண நாளுக்கு 5 நாட்களுக்கு முன்பு விவாகரத்து குறித்து சமூக வலைதளத்தில் அறிவித்தார்கள் நாக சைதன்யாவும், சமந்தாவும்.
​கெரியர்​நாக சைதன்யாவை பிரிந்த பிறகு கெரியரில் பிசியாகிவிட்டார் சமந்தா. குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடித்திருக்கும் சாகுந்தலம் படம் ஏப்ரல் 14ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் தன் திருமண வாழ்க்கை குறித்து பேசியிருக்கிறார் சமந்தா. கடினமான நேரத்தில் மோசமான எண்ணங்கள் தோன்றின. ஆனால் அவை என்னை அழிக்க விட மாட்டேன் என்றார்.
​ஆதரவு​சமந்தா மேலும் கூறியதாவது, எனக்கு நெருக்கமான பலர் எனக்கு ஆதரவாக இருக்க கொடுத்து வைத்திருக்கிறேன். அதில் இருந்து நான் இன்னும் வெளியே வரவில்லை. ஆனால் மோசமான நாட்கள் குறைந்துவிட்டன என்றார். என் திருமண வாழ்க்கையில் நான் உண்மையாக இருந்தும், எதுவும் திட்டமிட்டபடி நடக்கவில்லை என சமந்தா முன்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
​தைரியம்​தைரியமாக இருப்பதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. அப்படித் தான் இருக்க வேண்டும். அதை தான் செய்து கொண்டிருக்கிறேன். கடினமான தருணங்கள் வரும் போகும். அதிலேயே நாம் இருக்கக் கூடாது என்று சமந்தா தெரிவித்துள்ளார். அவர் கூறியதை கேட்ட ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து பாராட்டி வருகிறார்கள்.
​நாக சைதன்யா​ஹைதராபாத்தில் இருக்கும் ஜுபிளி ஹில்ஸ் பகுதியில் வசித்து வருகிறார் சமந்தா. அதே பகுதியில் ரூ. 15 கோடிக்கு வீடு வாங்கி குடியேறியிருக்கிறார் நாக சைதன்யா. இதை பார்த்த ரசிகர்களோ சமந்தாவும், நாக சைதன்யாவும் மீண்டும் சேரக்கூடும் என்று பேசத் துவங்கினார்கள். ஒரே பகுதியில் இருப்பதால் அடிக்கடி பார்த்துக்கொள்ளக்கூடும். பழைய நினைவுகள் வந்து சேர்ந்துவிடுவார்கள் என்றார்கள் ரசிகர்கள்.

​Naga Chaitanya:சமந்தா வசிக்கும் ஏரியாவில் ரூ. 15 கோடிக்கு வீடு வாங்கி குடியேறிய மாஜி கணவர்

​காதல்​சமந்தாவும், நாக சைதன்யாவும் சேர்ந்துவிடுவார்கள் என்று ரசிகர்கள் நம்பிய நிலையில் தான் அந்த புகைப்படம் வைரலானது. நாக சைதன்யாவும், நடிகை சோபிதா துலிபாலாவும் லண்டனில் இருக்கும் உணவகம் ஒன்றுக்கு சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகியிருக்கிறது. அதை பார்த்தவர்களோ நாக சைதன்யாவும், சோபிதாவும் காதலிப்பதாக மீண்டும் பேசத் துவங்கிவிட்டார்கள்.

​Naga Chaitanya: லண்டனில் பொன்னியின் செல்வன் 2 பட நடிகையுடன் சமந்தாவின் மாஜி கணவர்: வைரல் போட்டோ​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.