'இன்று ஏப். 1' மோடி அனைவரையும் முட்டாளாக்குகிறார் என்று காங்கிரஸ் அறிக்கைவிடும் – பிரதமர் மோடி சாடல்

போபால்,

மத்தியபிரதேசத்தின் போபால் – தலைநகர் டெல்லி இடையே வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கிவைத்தார். இது 11வது வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலாகும்.

இந்த ரெயில் போபாலின் ராணி கமல்பதி ரெயில் நிலையத்தில் புறப்பட்டு 708 கிலோ மீட்டர்கள் தூரம் பயணித்து தலைநகர் டெல்லியின் ஹஸ்ரத் நிசாமுதின் ரெயில் நிலையத்தை வந்தடைகிறது. இந்த ரெயிலின் பயண நேரம் 7 மணி நேரம் 45 நிமிடங்கள் ஆகும். இந்த ரெயில் வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்பட உள்ளது.

இந்நிலையில், டெல்லி – போபால் இடையேயான வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் திட்டத்தை தொடங்கி வைத்த பின் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இன்று ஏப்ரல் 1-ம் தேதி, மோடி அனைவரையும் முட்டாள் (April Fool) ஆக்குவதாக நமது காங்கிரஸ் நண்பர்கள் நிச்சயம் அறிகை கொடுப்பார்கள். ஆனால் நீங்கள் பாருங்கள். இந்த ரெயில் ஏப்ரல் 1-ம் தேதியே தொடங்குகிறது. இது தான் நமது திறமை, நம்பிக்கையின் அடையாளம்’ என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.