சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இம்மாதம் 7-ம் தேதி, மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அதிமுக வெளியிட்ட செய்திக் குறிப்பு: அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில், தலைமைக் கழகம், எம்ஜிஆர் மாளிகையில், வருகின்ற 7.4.2023 – வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.மேற்கண்டவர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.