கடந்த 19ஆம் திகதி இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 10 இலட்சம் முட்டைகளின் விநியோகம் குறித்து அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தகவல் வெளியிட்டுள்ளது.
அதன்படி முட்டைகளின் மாதிரிகளைப் பரிசோதித்த பின்னர் கொழும்பு மாவட்டத்தில் உள்ள வெதுப்பக உற்பத்தியாளர்களுக்கு விநியோகிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முட்டைகள் நாளைய தினம் (24.04.2023) பரிசோதிக்கப்படவுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.
முட்டைகள் தொடர்பான அறிக்கை
இதேவேளை, கடந்த 15ஆம் திகதி இலங்கை வந்த முட்டைகள் தொடர்பான அறிக்கை நாளைய தினம் (24.04.2023) கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திடம் வழங்கப்படவுள்ளதாகவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.