செங்கோலை “வாக்கிங் ஸ்டிக்” போல வைத்திருந்தது காங்கிரஸ்- அமித் ஷா சாடல்

இந்திய கலாச்சாரம் மீது காங்கிரஸ் கட்சி ஏன் இவ்வளவு வெறுப்பு வைத்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வியெழுப்பியுள்ளார்.

புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவை புறக்கணிக்க போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்திருப்பதை விமர்சித்து, ட்விட்டரில் அமித் ஷா பதிவு வெளியிட்டுள்ளார். அதில், ஆங்கிலேயரிடம் இருந்து 1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்ததை குறிக்கும் வகையில் செங்கோல் வழங்கப்பட்டதற்கு எந்த ஆதாரமுமில்லை என காங்கிரஸ் தெரிவித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.   

நேருவிடம் வழங்குவதற்காக செங்கோலை தமிழகத்தை சேர்ந்த சைவ மடாதிபதி அளித்தார் என்றும், ஆனால் அந்த செங்கோலை நடைபயணத்துக்கு உதவும் வாக்கிங் ஸ்டிக் போல அருங்காட்சியகத்தில் காங்கிரஸ் வைத்திருந்தது என்றும் அமித் ஷா சாடியுள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.