Suriya: ஓங்கி அடுச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா, பார்க்குறியா?: ஹேட்டர்ஸே இல்லா சிங்கம்

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, விவேக், ராதாரவி, பிரகாஷ் ராஜ், நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடித்த சிங்கம் படம் கடந்த 2010ம் ஆண்டு மே மாதம் 28ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. படம் பார்த்த அனைவருக்கும் பிடித்துவிட்டது.

விஜய்யை புகழ்ந்த மிஸ்கின்!
தூத்துக்குடி மாவட்டம் நல்லூரில் இருக்கும் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக வேலை செய்த துரைசிங்கத்துடன் மோதுவார் பிரகாஷ் ராஜ். அதன் பிறகு துரைசிங்கம் எப்படி வேட்டையாடுகிறார் என்பது தான் கதை.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

ஓங்கி அடுச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா, பார்க்குறியானு சொல்லி சூர்யா அடித்த காட்சி இன்றளவும் பிரபலம். சூர்யாவின் மாஸ் காட்சிகள் தீயாக இருந்தன. சூர்யா, அனுஷ்கா இடையேயான காதல் காட்சிகள் க்யூட்.

விவேக்கின் காமெடியை சொல்லவே வேண்டாம். எரிமலை எப்படி பொறுக்கும் என விவேக் சொல்லும்போது சிரிக்காமல் இருக்க முடியாது. அந்த காட்சிகளை பார்க்கும்போது விவேக் உயிருடன் இல்லை என்பதை நம்ப முடியவில்லை.

காதல், ஆக்ஷன், காமெடி என அனைத்தும் சரியான அளவில் கலந்து கொடுக்கப்பட்ட சிங்கம் படம் சூப்பர் ஹிட்டானது. சூர்யா படத்தை எல்லாம் யார் பார்ப்பார், நான் அவர் ரசிகனே இல்லை என்று சொல்பவர்களால் கூட சிங்கத்தை குறை சொல்ல முடியாது.

Karthi: செம சண்டை: தரையில் கட்டி உருண்ட சூர்யா, கார்த்தி

அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த படம் சிங்கம். துரைசிங்கத்திற்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. சூர்யாவின் நடிப்பு மாஸ், க்யூட் என்றே சொல்ல வேண்டும்.

ரொம்ப டென்ஷனாக இருந்தால் சிங்கம் படத்தை பார்த்தால் ரிலாக்ஸ் ஆகிவிடலாம். அந்த அளவுக்கு சிங்கம் படம் சூப்பராக இருக்கும். ஹேட்டர்ஸே இல்லாத சிங்கம் படம் ரிலீஸாகி இன்றுடன் 13 ஆண்டுகள் ஆகிவிட்டது.

இதையடுத்து #13YearsOfSingam என்கிற ஹேஷ்டேகுடன் அது பற்றி ட்விட்டரில் பேசி வருகிறார்கள். 2010ம் ஆண்டு அதிகம் வசூல் செய்த தென்னிந்திய படங்களில் இரண்டாவது இடம் சிங்கத்திற்கு தான். சிங்கம் படத்தை அடுத்து அதன் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகங்களும் வந்தன.

சூர்யாவின் அறிமுக காட்சியிலேயே பட்டையை கிளப்பியிருப்பார் ஹரி. குறை சொல்ல முடியாத சிங்கம் படத்தில் வந்த காட்சிகளின் வீடியோக்களை ஷேர் செய்து அது பற்றி ரசிகர்கள் பெருமையாக பேசி வருகிறார்கள்.

அந்த ஓங்கி அடுச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா வசனம் இன்று உள்ள குட்டீஸ்களுக்கும் பிடித்த வசனம் ஆகும். ஒரு படத்தின் இரண்டாம் பாகம் எல்லாம் வருவது தற்போது சகஜமாகிவிட்டது. ஆனால் மூன்று பாகங்களாக வந்த முதல் தமிழ் படம் சிங்கம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் பாகத்தில் சூர்யாவை ஒருதலையாக காதலித்தார் ஹன்சிகா. மூன்றாவது பாகத்தில் சூர்யாவை ஒரு தலையாக காதலித்தார் ஸ்ருதி ஹாசன். பின்னர் சூர்யாவுக்கு திருமணமான விஷயம் தெரிந்ததும் மனதை மாற்றிக்கொள்வார்.

மூன்று பாகங்களுமே ரசிகர்களை கவர்ந்தது. சைலன்டான நடிப்பில் ரசிகர்களை கவர்ந்தார் அனுஷ்கா என்றே கூற வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.