தந்தையை கொலை செய்த பெண் ஒரு வருடத்திற்கு பின்அடித்துக் கொலை..!

ராமநாதபுரம் அருகே தந்தையை கொலை செய்த பெண் ஒரு வருடத்திற்கு பின்அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

காவனூர் ஆசாரிமடத்தைச் சேர்ந்த பவித்ரா என்பவர் திருமணம் மீறிய உறவில் இருப்பதை தந்தை கண்டித்ததால் தாயுடன் இணைந்து கடந்த ஆண்டு பெட்ரோல் ஊற்றி அவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இந்த வழக்கில் கைதான தாயும், மகளும் தற்போது ஜாமீனில் வெளியே உள்ள நிலையில் பவித்ராவுக்கு கொத்தனார் ஒருவருடன்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதுபற்றி தகவல் அறிந்த ரவியின் தம்பி மகன் டிரைவர் மணி என்பவர் நேற்று மாலை பவித்ரா மட்டும் தனியாக வீட்டில் இருந்த போது அங்கு சென்று இரும்பு கம்பியால் அவரது தலையில் பயங்கரமாக அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.