Sai Pallavi: எனக்கு சாய் பல்லவி மீது பயங்கர கிரஷ்: பப்ளிக்கா சொன்ன பிரபல நடிகர்

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்

​குல்ஷன்​பாலிவுட் படங்கள், இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் குல்ஷன் தேவய்யா. நடிகை Kallirroi Tziafeta-ஐ கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 2020ம் ஆண்டு அவர்கள் பிரிந்துவிட்டார்கள். மனைவியை பிரிந்து விட்டாலும் அவருடன் நட்பாக இருந்து வருவதாக தெரிவித்தார் குல்ஷன். தற்போதும் அவரிடம் நான் எது பற்றி வேண்டுமானாலும் பேசலாம். நான் யாரையாவது டேட் செய்தாலும் அவரிடம் கூறுவேன் என்றார்.விஜய்​விஜய்யை புகழ்ந்த மிஸ்கின்!​​சாய் பல்லவி​குல்ஷன் தேவய்யாவுக்கு தற்போது நடிகை சாய் பல்லவி மீது கிரஷ் ஏற்பட்டிருக்கிறது. குல்ஷன் கூறியதாவது, எனக்கு சாய் பல்லவி மீது பயங்கர கிரஷ். இது சில காலமாகவே இருக்கிறது. என்னிடம் அவரின் செல்போன் நம்பர் கூட இருக்கிறது. ஆனால் அவரை தொடர்பு கொள்ள துணிச்சல் இல்லை. அவர் ஒரு அருமையான டான்ஸர், நடிகை என நினைக்கிறேன் என்றார்.
​நடிகை​குல்ஷன் மேலும் கூறியதாவது, இது வெறும் கிரஷ் தான். அதை தாண்டி வேறு எதுவும் இல்லை. அவர் சிறந்த நடிகை. எப்பொழுதாவது அவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். அது போதும் எனக்கு. மற்றது பற்றி தெரியவில்லை. மற்றவை நடக்காவிட்டால் என்ன செய்வது?. ஒரு விஷயம் நடக்க வேண்டும் என்று இருந்தால் அது நடக்கும், இல்லை என்றால் அது நடக்காது. ஒரு சிறந்த நடிகையுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் நலல்து. அதில் தவறு எதுவும் இல்லையே என்றார்.

​Karthi: செம சண்டை: தரையில் கட்டி உருண்ட சூர்யா, கார்த்தி

​தமிழ்​கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த குல்ஷன் தேவய்யாவுக்கு தமிழ் தெரியும். அதனால் தமிழ் படத்தில் சாய் பல்லவியுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் மொழி அவருக்கு ஒரு பிரச்சனையாக இருக்காது. சாய் பல்லவி பட வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக அதை ஏற்பது குறித்து யோசிப்பேன். ஸ்க்ரிப்ட்டை பார்த்துவிட்டு அதன் பிறகே அந்த படத்தில் நடிப்பதா, வேண்டாமா என முடிவு செய்வேன். சாய் பல்லவியை சந்திக்கும் வாய்ப்பு கிடைப்பது பிளஸ் என்கிறார் குல்ஷன்.
​எஸ்.கே. 21​Kamal Haasan:நான் அன்றே சொன்னேன், யாரும் என் பேச்சை கேட்கல: கமல் ஹாசன்சாய் பல்லவி தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக எஸ்.கே. 21 படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை உலக நாயகன் கமல் ஹாசன் தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்துக் கொண்டிருக்கிறார். சிவகார்த்திகேயனும், சாய் பல்லவியும் சேர்ந்து நடிப்பது இதுவே முதல் முறையாகும்.

​ஹீரோயின்​ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இருந்தால் தான் அந்த படத்திலேயே நடிக்க ஒப்புக் கொள்வார் சாய் பல்லவி. அதனால் ராஜ்குமார் பெரியசாமி படத்தில் சாய் பல்லவிக்கு வெயிட்டான கதாபாத்திரமாகத் தான் இருக்கும் என நம்பப்படுகிறது. சும்மா வந்து ஹீரோவை பார்த்து சிரித்து, மரத்தை சுற்றி சுற்றி டூயட் பாடிவிட்டு செல்வது சாய் பல்லவிக்கு பிடிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.