STR 48: படப்பிடிப்பே இன்னும் துவங்கல.. சிக்கலில் மாட்டிய சிம்பு – கமல் படம்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் சிம்பு. தனது ரீ என்ட்ரிக்கு பிறகு நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அடுத்ததாக இவரது நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் ‘எஸ்டிஆர் 48’ படம் உருவாகவுள்ளது. இந்நிலையில் இந்தப்படம் குறித்து வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
தொடர்ச்சியாக பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வந்த சிம்பு ‘மாநாடு’ படத்தின் மூலம் வேறலெவல் கம்பேக் கொடுத்தார். வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி வசூலில் மாஸ் காட்டியது இந்தப்படம். இதனையடுத்து சிம்பு, கெளதம் மேனன், ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் ‘வெந்து தணிந்தது காடு’ படம் ரிலீசானது. இந்தப்படத்திற்காக உடல் எடையை முழுவதுமாக குறைத்து சின்ன பையன் லுக்கில் மிரட்டினார் சிம்பு.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்தப்படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பால் ‘வெந்து தணிந்தது காடு’ இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகவும் படக்குழு அறிவித்தது. இதனையடுத்து சிம்பு ஏற்கனவே நடித்த ‘பத்து தல’ படமும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. கன்னட படத்தின் அபிசியல் ரீமேக்கான இந்தப்படத்தில் டானாக நடித்து மாஸ் காட்டினார் சிம்பு.

மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என தொடர்ச்சியாக ஹாட்ரிக் வெற்றியை கொடுத்துள்ள சிம்புவின் அடுத்த படத்தின் அறிவிப்பு அண்மையில் வெளியானது. உலகநாயகனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ‘எஸ்டிஆர் 48’ படம் உருவாகவுள்ளதாக அதிரடியான அறிவிப்பு வெளியானது. தேசிங்கு பெரியசாமி ஏற்கனவே ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற பிரம்மாண்ட வெற்றி படத்தை கொடுத்துள்ளவர்.

தந்தை புகைப்படத்திற்கு முன் ஆசீர்வாதம் வாங்கிய மகன்: மேக்னா ராஜின் உருக்கமான பதிவு.!

இவரும் சிம்புவும் இணையவுள்ள படத்தில் வரலாற்று சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம்பெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் இந்தப்படம் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகவுள்ளது. ‘எஸ்டிஆர் 48’ படத்தில் நடிக்க பிரபல பாலிவுட் கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இந்தப்படம் குறித்து வலைப்பேச்சு வீடியோவில் வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கம்பெனிக்கு சிம்பு மூன்று படம் பண்ண ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்து ஆகியுள்ள நிலையில், சிம்பு தனக்கு படம் பண்ணி கொடுக்காமல் வேறு தயாரிப்பாளரின் பேனரில் படம் பண்ணக்கூடாது என தயாரிப்பாளர் சங்கத்திடம் ஐசரி கணேஷ் புகார் அளித்துள்ளதாக வலைப்பேச்சு அந்தணன் கூறியுள்ளார். படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பே ‘எஸ்டிஆர் 48’ படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘மார்கழி திங்கள்’ படப்பிடிப்பில் திடீர் விபத்து.. உயிர் தப்பிய படக்குழு: சுசீந்திரன் பகீர் தகவல்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.