உலகை உலுக்கிய ஒடிஷா கோர ரயில்கள் விபத்தில் பலி எண்ணிக்கை 294 ஆக அதிகரிப்பு; 900 பேர் படுகாயம்

புவனேஸ்வர்: ஒடிஷா மாநிலத்தில் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 294 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் 900 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஒடிஷா ரயில் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் படுகாயம் அடையவில்லை.

ஒடிஷா மாநிலம் பாலசோர் பகுதியில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், யஷ்வந்த்பூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை மோதி மிகப் பெரும் விபத்து நிகழ்ந்தது. உலகையே அதிரவைத்த இந்த ரயில் விபத்தில் சிக்கி இதுவரை 294 பேர் மரணம் அடைந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் சிக்கிய 900 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

ஒடிஷா ரயில் விபத்தில் சிக்கி மரணம் அடைந்த 194 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. எஞ்சிய 100 பேரின் உடல்கள், புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

ஒடிஷா ரயில் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பலர் படுகாயம் அடைந்துள்ளனர். ஆனால் தமிழ்நாட்டு பயணிகள் யாரும் உயிரிழக்கவில்லை என தெரியவந்துள்ளது. ஒடிஷா ரயில் விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டு பயணிகளை பாதுகாப்பாக அனுப்பி வைப்பதற்காக அமைச்சர்கள் உதயநிதி, சிவசங்கர் ஆகியோர் அடங்கிய குழு ஒடிஷாவில் முகாமிட்டுள்ளது.

ஒடிஷா ரயில் விபத்து இடத்தை பிரதமர் மோடி நேற்று பார்வையிட்டார். அங்கு மீட்பு, நிவாரணப் பணிகளை பிரதமர் மோடி ஆய்வு செய்தார். ஒடிஷாவின் கட்டாக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் பிரதமர் மோடி. ரயில்களில் பயணம் செய்த பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இந்த மாபெரும் சோகத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பிரதமர் மோடி கூறினார். உயிர் இழப்புகள் குறித்துப் பேசுகையில், காயமடைந்தவர்களுக்கு அனைத்து மருத்துவ உதவிகளையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறினார். அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுடன் அரசு துணை நிற்கிறது என்றார் அவர்.

முன்னதாக மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், தர்மேந்திர பிரதான் ஆகியோர் கடந்த 3 நாட்களாக அப்பகுதியில் முகாமிட்டு மீட்பு, நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.

ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக். மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஆகியோரும் ரயில் விபத்து நிகழ்விடத்தை பார்வையிட்டு காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

The death toll in Odisha train tragedy has risen to 294 while 900 people have been injured.

On 04-06-2023 06:17, Mathivanan Maran wrote:
> Odisha Train Accident- Death Toll Rises to 294, Injured increases to 750
>
> Odisha train accident, Coromandel Express, Coromandel Express collides with goods train in Odisha’s Balasore, coromandel express accident, Coromandel Express derails in Odisha’s Balasore district, train accident news in tamil, train accident in odisha today, coromandel express accident today latest news in tamil, coromandel express accident death toll, ஒடிசா ரயில் விபத்து, கோரமண்டல் எக்ஸ்பிரஸ், கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஒடிசாவின் பாலசோரில் சரக்கு ரயிலுடன் மோதிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்து, கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் தடம் புரண்டது கோரமண்டல் விரைவு விபத்து இறப்பு எண்ணிக்கை
>
> Odisha train accident, Coromandel Express Train, Train Accident, ஒடிசா ரயில் விபத்து, கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ரயில் விபத்து
>
> உலகை உலுக்கிய ஒடிஷா கோர ரயில்கள் விபத்தில் பலி எண்ணிக்கை 294 ஆக அதிகரிப்பு; 750 பேர் படுகாயம்
>
> புவனேஸ்வர்: ஒடிஷா மாநிலத்தில் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 294 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் 750 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஒடிஷா ரயில் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் படுகாயம் அடையவில்லை.
>
> ஒடிஷா மாநிலம் பாலசோர் பகுதியில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், யஷ்வந்த்பூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை மோதி மிகப் பெரும் விபத்து நிகழ்ந்தது. உலகையே அதிரவைத்த இந்த ரயில் விபத்தில் சிக்கி இதுவரை 294 பேர் மரணம் அடைந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் சிக்கிய 750 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
>
> ஒடிஷா ரயில் விபத்தில் சிக்கி மரணம் அடைந்த 194 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. எஞ்சிய 100 பேரின் உடல்கள், புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.
>
> ஒடிஷா ரயில் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பலர் படுகாயம் அடைந்துள்ளனர். ஆனால் தமிழ்நாட்டு பயணிகள் யாரும் உயிரிழக்கவில்லை என தெரியவந்துள்ளது. ஒடிஷா ரயில் விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டு பயணிகளை பாதுகாப்பாக அனுப்பி வைப்பதற்காக அமைச்சர்கள் உதயநிதி, சிவசங்கர் ஆகியோர் அடங்கிய குழு ஒடிஷாவில் முகாமிட்டுள்ளது.
>
> ஒடிஷா ரயில் விபத்து இடத்தை பிரதமர் மோடி நேற்று பார்வையிட்டார். அங்கு மீட்பு, நிவாரணப் பணிகளை பிரதமர் மோடி ஆய்வு செய்தார். ஒடிஷாவின் கட்டாக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் பிரதமர் மோடி. ரயில்களில் பயணம் செய்த பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இந்த மாபெரும் சோகத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பிரதமர் மோடி கூறினார். உயிர் இழப்புகள் குறித்துப் பேசுகையில், காயமடைந்தவர்களுக்கு அனைத்து மருத்துவ உதவிகளையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறினார். அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுடன் அரசு துணை நிற்கிறது என்றார் அவர்.
>
> முன்னதாக மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், தர்மேந்திர பிரதான் ஆகியோர் கடந்த 3 நாட்களாக அப்பகுதியில் முகாமிட்டு மீட்பு, நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.
>
> ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக். மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஆகியோரும் ரயில் விபத்து நிகழ்விடத்தை பார்வையிட்டு காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.