Odisha Train Accident: ஒடிஷா ரயில் விபத்து: குறை சொல்லாமல் இதை மட்டும் செய்யுங்கள்: மோடி, நவீன் பட்நாயக்கிற்கு சோனு சூத் கோரிக்கை

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
ஒடிஷா மாநிலம் பாலசோரில் இருக்கும் Bahanaga Bazar ஸ்டேஷனில் மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளானதில் இதுவரை 288 பேர் பலியாகியுள்ளனர், 1000 பேர் காயம் அடைந்துள்ளனர்.

“Please..இத மட்டும் வெளிய சொல்லாதீங்க.- கெஞ்சிய சரத்குமார்!
ஒடிஷாவில் நடந்த கோர விபத்து குறித்து அறிந்து நாட்டு மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். விபத்தில் பலியானவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளனர்.

ரயில் விபத்து குறித்து திரையுலக பிரபலங்கள் பலர் அதிர்ச்சி அடைந்திருப்பதுடன், தங்களின் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்பட்டபோது பலருக்கு உதவி செய்த நடிகர் சோனு சூதும் வேதனை அடைந்திருக்கிறார். ஒடிஷா ரயில் விபத்து பற்ரி சோனு சூத் கூறியிருப்பதாவது,

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

ஒடிஷா ரயில் விபத்தால் வேதனை அடைந்துள்ளேன். அந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் இதை கடந்து சென்றுவிடுவார்கள். ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் தான் கடைசி வரை கஷ்டப்படும்.

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிவாரணம் அளிக்கலாம். ஆனால் அது போதாது. அதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் சேர்ந்து ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிரந்தர வருவாய் வரும் வகையில் திட்டம் கொண்டு வர வேண்டும். அது தான் அவர்களுக்கு உதவியாக இருக்கும்.

மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து வருவாய்க்கு ஏற்பாடு செய்தால் அது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாருக்கு பல காலம் உதவியாக இருக்கும். அவர்களின் இழப்பை ஈடு செய்ய முடியாது. இருப்பினும் இந்த வருவாய் மூலம் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தலாம்.

விபத்து தொடர்பாக யாரையும் குறை சொல்ல வேண்டாம் என மத்திய, மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறேன். இந்த கோர விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதிலேயே அரசுகளின் கவனம் இருக்க வேண்டும் என விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ரயில் விபத்திற்கான காரணத்தை கண்டுபிடித்தாகிவிட்டது என ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங்கில் ஏற்பட்ட மாற்றமே விபத்திற்கு காரணம் என அவர் கூறியிருக்கிறார்.

ரயில் விபத்து தொடர்பான தற்போதைய நிலவரத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று காலை போன் மூலம் விளக்கினார் ஒடிஷா மாநில முதல்வர் நவீன் பட்நாயக். ரயில் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து விபரமாக விளக்கினார் நவீன் பட்நாயக்.

ரயில் விபத்து குறித்து கமல் ஹாசன் சமூக வலைதளத்தில் கூறியதாவது,

ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே இரு பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்ட விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதும் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.

Kamal Haasan: கீர்த்தி சுரேஷுக்கு அழகோடு அறிவும் இருக்கிறது, அதனால் தான்…: கமல்

நாட்டையே உலுக்கியுள்ள இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது நம் வேதனையை அதிகரிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென விழைகிறேன்.

உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த ரயில் விபத்து, இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள், விபத்தின் தாக்கத்தில் இருந்து மீள தேச மக்கள் அனைவரும் துணை நிற்போம் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.