இந்தியாவில் தொடர்ந்து சரியும் கொரோனா பாதிப்பு: புதிதாக 124 பேருக்கு தொற்று

புதுடெல்லி,

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 202 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், 174 பேருக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று புதிதாக 124 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 91 ஆயிரத்து 880 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் இருந்து 24 மணி நேரத்தில், 314 பேர் குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 4 கோடியே 44 லட்சத்து 56 ஆயிரத்து 995 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்று அதில் 192 குறைந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி, 3 ஆயிரத்து 001 பேர் சிகிச்சையில் இருந்தனர்.

தொற்றுக்கு நேற்று முன்தினம் 2 பேர் பலியானார்கள். இன்றும் பலி எண்ணிக்கை 2 ஆக இருந்தது. அதில், கேரளாவில், விடுபட்ட இரண்டு மரணமும் அடங்கும். மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 884 ஆக அதிகரித்தது.


Related Tags :

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.