குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு சுரினாம் நாட்டின் உயரிய விருது..!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சுரினாம் நாட்டின் உயரிய விருதான ‘கிராண்ட் ஆர்டர் ஆஃப் தி செயின் ஆஃப் தி யெல்லோ ஸ்டார்’ விருதை வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

3 நாள் பயணமாக சுரினாம் சென்றுள்ள குடியரசு தலைவர் முர்மு, 1873-ம் ஆண்டு சுரினாமுக்கு கப்பல் மூலம் இந்தியர்கள் சென்றதன் 150வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் கலாச்சார விழாவில் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது, தமக்கு வழங்கப்பட்டுள்ள சுரினாமின் உயரிய விருதை இந்திய-சுரினாமியர் சமூகத்திற்கு அர்ப்பணிப்பதாக குடியரசுத் தலைவர் கூறினார்.

இந்தியாவுக்கும் சுரினாமுக்கும் இடையே கலாசார ஒற்றுமைகள் இருப்பதாக குறிப்பிட்ட முர்மு, சுரினாம் வந்திருப்பது தமது சொந்த வீட்டிற்கு வந்திருப்பதைப் போல இருப்பதாகவும் கூறினார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.