ஜெய்ப்பூர்,ராஜஸ்தானில், அரசு பள்ளி ஒன்றில் படித்த சிறுமியரை, சாக்லேட் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த புகாரில் கைது செய்யப்பட்ட பள்ளி முதல்வர், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டு உள்ளார்.
பாலியல் புகார்
ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது.
இங்கு, துங்கர்புர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றின் முதல்வராக இருந்தவர், ரமேஷ் சந்திர கட்டாரா.
இவர் மீது, பள்ளியில் படிக்கும் சிறுமி ஒருவர், சமீபத்தில் பாலியல் புகார் அளித்தார். இதன்படி வழக்கு பதிந்து விசாரித்த போலீசார், பள்ளி முதல்வர் ரமேஷ் சந்திர கட்டாராவை கைது செய்தனர்.
இதையடுத்து, அவரை ‘சஸ்பெண்ட்’ செய்து மாவட்ட கல்வி நிர்வாகம் உத்தரவிட்டது.
கைது
இதுகுறித்து, துங்காபர் காவல் கண்காணிப்பாளர் குந்தன் கவாரியா கூறியதாவது:
கோடை விடுமுறையின் போது, 9 – 12 வயது வரை உள்ள மாணவியரை, சிறப்பு பயிற்சிக்காக பள்ளிக்கு வரும்படி, ரமேஷ் சந்திர கட்டாரா கூறி உள்ளார்.
இதன்படி, பள்ளிக்கு வந்த சிறுமியரை, புதிதாக கட்டியுள்ள தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதன்பின், சிறுமியருக்கு சிப்ஸ், சாக்லேட் வாங்கி தந்துள்ளார். இப்படி ஆறுக்கும் மேற்பட்ட சிறுமியரை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில், ரமேஷ் சந்திர கட்டாராவை கைது செய்தோம். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்