41 வயதில் இறந்த இதய மருத்துவர்.. திடீரென நடந்த கால பைரவ கர்மா பூஜை.. எதுக்கு தெரியுமா?

காந்திநகர்:
16000 பேருக்கு இதய அறுவை சிகிச்சை செய்து அவர்களின் உயிரை காப்பாற்றிய பிரபல இதய மருத்துவர் கவுரவ் காந்தி அகால மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவருக்காக கால பைவர கர்மா பூஜை ஏன் நடத்தப்பட்டது என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

குஜராத் மாநிலம் ஜாம் நகரைச் சேர்ந்தவர் கவுரவ் காந்தி (41). குஜராத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள தலைசிறந்த இதய மருத்துவர்களில் ஒருவராக திகழ்ந்தார். இதுவரை 16000 இதய அறுவை சிகிச்சைகளை செய்து மரணத்தின் விளம்பில் இருந்த பலரை மீட்டவர் கவுரவ் காந்தி.

அதுமட்டுமின்றி, மாரடைப்பு வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்; என்னென்ன உணவுகளை உண்ண வேண்டும் என்பது போன்ற விழிப்புணர்வு பதிவுகளையும் தினமும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு லட்சக்கணக்கானோரின் அன்பையும் பெற்று வந்தார்.

காலை எழவில்லை:
இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை காலையில் வழக்கம் போல மருத்துவமனைக்கு சென்ற கவுரவ் காந்தி, அங்குள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவிட்டு மாலையில் வீடு திரும்பியுள்ளார். பின்னர், இரவும் எப்போதும் போல சாப்பிட்டுவிட்டு உறங்க சென்றிருக்கிறார். பொதுவாக, காலை 6 மணிக்கே எழுந்து உடற்பயிற்சி செய்யும் பழக்கம் கொண்ட கவுரவ் காந்தி, அன்றைக்கு 8 மணி ஆகியும் எழாததால் அவரது குடும்பத்தினர் அவரை எழுப்பச் சென்றனர்.

அகால மரணம்:
ஆனால் அவர் எந்த அசைவும் இன்றி கிடந்துள்ளார். இதனால் பயந்துபோன குடும்பத்தினர், அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே மாரடைப்பில் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சரியான உணவுப்பழக்கமும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் கடைப்பிடித்து வந்த இதய மருத்துவரே, இத்தனை சிறிய வயதில் மாரடைப்பில் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கால பைரவ பூஜை:
இந்த சூழலில், மரணம் அடைந்த மருத்துவர் கவுரவ் காந்திக்காக கோவை ஈஷா மையத்தில் கால பைரவா கர்மா பூஜை இன்று நடைபெற்றது. இந்த பூஜை எதற்காக நடைபெற்றது என்று விசாரித்த போது பல தகவல்கள் வெளியாகின. அதாவது இந்த காலபைரவ கர்மா பூஜை என்பது ஒரு சக்திவாய்ந்த ஆன்மிகச் சடங்கு எனக் கூறப்படுகிறது. பொதுவாக, ஒரு நபர் உயிரிழக்கும் போது அவருக்கு எந்த மாதிரியான உணர்வுகள் ஏற்படுகிறதோ அந்த உணர்வே அவரது மறுபிறப்பிலும் அதிகமாக இருக்கும் என ஆன்மிகத்தில் நம்பப்படுகிறது.

எதற்காக பூஜை?
அது பயம், கோபம், பதற்றம், கவலை என எதுவாக இருந்தாலும், அந்த உணர்வைதான் அவரது ஆத்மா சுமந்து சென்று அடுத்த உடலை அடையுமாம். அப்படி இருப்பது மறுபிறவியில் அவருக்கும், அவரது இக்கால மற்றும் மறுஜென்மத்தில் வரும் உறவினர்களுக்கும் தீமை விளைவிக்கும் எனக் கூறப்படுகிறது. இதனை நிவர்த்தி செய்வதற்காகவே, உயிரிழந்த மருத்துவர் கவுரவ் காந்திக்காக கோவை ஈஷா மையத்தில் உள்ள லிங்க பைரவியில் காலபைர கர்மா மற்றும் காலபைரவ சாந்தி ஆகிய பூஜைகள் செய்யப்பட்டன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.